Archives: நவம்பர் 2022

மிக அழகான

என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகாமையில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம். 

தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதினால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8). 

தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள். 

ஆசீர்வாதமான மனந்திரும்புதல்

கிரேடி, கேட்பவர்கள் எல்லோருக்கும் தன்னை “உடைந்தது” (BROKE) என்று தன்னுடைய தெருப் பெயரை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்வான். அவனுடைய அடையாள அட்டையிலும் அதைப் பொறித்திருந்தான். அவன் சூதாட்டம், விபச்சாரம், ஏமாற்றுதல் போன்ற செய்கைகளில் ஈடுபட்ட நடுத்தர வயது கொண்டவன். அவன் உடைக்கப்பட்டவனாகவும், தேவனை விட்டு தூரமாகவும் வாழ்ந்தான். ஆனால் ஒரு மாலை நேரத்தில் ஒரு ஹோட்டல் அறையில், தேவனுடைய ஆவியானவரால் ஏற்பட்ட உணர்த்துதலினால், அனைத்தும் மாறியது. “நான் இரட்சிக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று தன் மனைவியிடம் கூறினான். அன்று மாலை அவன் பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்காக இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தான். நாற்பது வயதை தாண்டமாட்டோம் என்று எண்ணிய இவன், அடுத்த முப்பது வருடங்கள் விசுவாசியாக மாறி, தேவனுக்கு ஊழியம் செய்தான். அவரது ஓட்டுனர் உரிமத்தில், “உடைந்தது” என்ற வாசகம், “மனந்திரும்பு” (REPENT) என்று மாற்றப்பட்டது. 

“மனந்திரும்பு.” அதைத் தான் கிரேடி செய்தான். அதைத்தான் இஸ்ரவேலர்கள் செய்யவேண்டும் என்று ஓசியா 14:1-2 சொல்லுகிறது. “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்;.” சிறியதோ, பெரியதோ, நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்டதாயிருப்பினும், அது நம்மை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறது. ஆனால் பாவத்திலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் மரணத்தின் மூலம் சாத்தியமாக்கப்பட்ட மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த பிரிவு மாற்றப்படுகிறது. நீங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுகிறவரோ, அல்லது கிரேடியைப் போன்ற வாழ்க்கை வாழ்பவரோ, யாராக இருப்பினும், உங்களுக்கான மன்னிப்பை ஒரு ஜெபத்தின் மூலம் சாத்தியமாக்கலாம். 

என் பாதுகாப்பின்மையை கடந்து வர கற்கிறேன்

நான் எப்பொழுதும் பாதுகாப்பின்மையோடு போராடுகிறேன். தவறுகளை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நான் வளர்ந்த சூழல் எனக்கு கற்றுத்தந்தது. அது ஏற்பட்டால் அது என்னுடைய தவறாகும் அதனால் நான் எப்போதும் சரியான வனாக இருக்க வேண்டிய தேவையும் அனைவரிடமும் என்னுடைய சிறந்த பதிப்பை வழங்க வேண்டியுள்ளது.

இந்த மனநிலை என்னை மிகவும் பாதித்தது, எதுவரை என்றால் "உங்களைப் பற்றி சொல்லுங்கள்" என்ற கேள்விக்கு விடை சொல்வது கடினமாய் இருக்கும் இதைக் கேட்கும் போதெல்லாம் வழக்கமான தவறுதல் என்னை துரத்தும் - பெயர், வயது, எங்கிருந்து வருகிறாய்…

தனிமையை தாக்கும் போது 4 பொய்களுடன் போராட்டம்

வெளிநாட்டிற்கு பாடசாலைக்கோ அல்லது வேலைக்காகவோ செல்வது ,ஒரு பிரிவிலிருந்து மீட்டெழுதல், குடும்பத்தில் தீராத மன வேறுபாடுகள் அல்லது காரணம் இல்லாமலே- நாம் அனைவரும் தனிமையின் பிடியை உணர்ந்திருக்கிறோம்.

அது பல நாட்கள், வாரங்கள் இழுத்து, நம்மை ஊக்கமின்மை மற்றும் மனச் சோர்வு அடையச் செய்கிறது. இந்த காலத்தில், நம் தனிமையை பற்றி நாம் நம்பும் பொய்கள் நம்மை முடக்கி நாம் விரும்பும் இணைப்புகள் உருவாவதை தடுத்து மற்றவரை நாடுவதை தடுக்கின்றன.

நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது கவனிக்க வேண்டிய பொய்கள் சில:

கவலை தாக்கும் போது நினைவில் வைக்க வேண்டிய 5 சத்தியங்கள்

நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில், இருட்டில் பயப்படுவது போன்ற சிறியது முதல் முழுதாக பாதிக்கும் வரை கவலையை அனுபவிக்கிறோம். கவலை தாக்கும்போது தேவனைப் பற்றி நாம் அறிந்தவற்றை நினைவு கூருவது கடினமாக இருக்கிறது. சற்று நிதானித்து நிலைமையை முழுவதுமாக பார்ப்பது கடினமாக இருக்கிறது.

நிலைமை மூச்சு முட்டும் போது, நாம் திரும்பிப் பார்க்க ஓரிடம் இருக்கிறது. கவலைதாக்கும் போது நம் கவனத்தை தேவன் மீது வைத்து இந்த சத்தியங்களை நினைவு கூரவேண்டும்.

எனக்கு மனச்சோர்வு இருந்தது மற்றும் அதை தான் நீங்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்

எனக்கு மனச்சோர்வு வரும் என்று நான் நினைத்ததே இல்லை. அது அந்நியர்களுக்கு தான் வரும் என்று நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய நெருங்கிய தோழி மனச்சோர்வுடன் போராடிய போதும், அவள் துன்பத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அது ஒரு சிறிய காலமே என்றும் மக்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே மீண்டு விடுவர் என்று நினைத்தேன்.

மனச்சோர்வு என்பது ஒரு ஆழ்ந்த கருத்து. நான் சோகமாக இருக்கும்போது சாதாரணமாக “மனச்சோர்வுடன்” இருப்பதாக சொல்வேன். எனக்கு மனச்சோர்வு ஏற்படும் வரை- அதை நான் புரிந்து கொள்ளவில்லை.

எனக்கு, சோர்வு என்பது-…